கோண்டாவிலிருந்து யாழ்ப்பாணம் பிரதான நீர்தாங்கிக்கு நீரை வழங்கும் தரைக்கீழ் நீர்வழங்கும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் நீரை பெறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிப்பு ஏற்பட்ட பகுதி
தபால்ப்பெட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள நீர் வழங்கும் 12' விட்டமுடைய குழாயில் ஏற்பட்ட இவ் வெடிப்பின் காரணமாக நீர் வெளியேறத்தொடங்கியதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அதிகாரி தெரிவித்;தார்.
திருத்த வேலை செய்யும் பணியாளர்கள்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நேற்று மாலையில் இருந்து ஊழியர்கள் வெடிப்பு ஏற்பட்ட குழாயினை சரிசெய்து வருகின்றனர். திருத்த வேலைகள் இன்று மாலைக்குள் நிறைவடையும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித்தேவைகளை நிறைவு செய்வதற்காக நீர்தாங்கிகள் மூலம் நீர்வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment