My Blog List

Thursday, February 14, 2013

'பூதம் அடுக்கிய கல்'



கிராமங்கள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சிறப்பம்சத்தினை தன்னகத்தே கொண்டிருக்கும். இவை பலராலும் அறியப்படாவிட்டாலும். அக்கிராம மக்கள் தமது கிராமத்தின் அதிசயமான ஒருவிடயமாகவும் உலக அதிசயத்துக்கு அடுத்ததாக இதுதான் பெரியது என எண்ணிப் பெருமைப்படுகின்றர்.

வன்னியில் விவசாயத்துக்கு பெயர்போன ஒரு செழிப்பு மிகு அழகிய கிராமம் தான் முத்துஐயன்கட்டு. இக்கிராமத்துக்கு அழகு சேர்;ப்பது முத்துஐயன்கட்டு குளமும், முத்துஐயன்கட்டு கிராமத்தினை ஊடறுத்து பாய்யும் பேராறும,; இக்கிராமத்தின் அழகுக்கு மெருகூட்டுகின்றது. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்து தான் 'பூதம் அடுக்கிய கல்' என்று சொல்லப்படும் அதிசய இடம். 
பூதம் அடுக்கிய கல்

பூதம் அடுக்கிய கல் என்பது பாரிய கருங்கல் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி ஓர் அணையாகவோ அல்லது மதிலாகவோ போடப்பட்டுள்ளது. இதன் அருகில் பேராறு ஓடுகின்றது. இவ் ஆற்றின் நீரரிப்பினைத் தடுக்கவும் அல்லது வெள்ளப் பெருக்கு காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் செல்லாத வண்ணம் பாதுகாப்பு அரணாக செயற்பட்டுவருகின்றது எனலாம்.

இதன் சிறப்பு என்னவென்றால்  இன்று பாரிய இயந்திரங்களின் உதவியுடனே பாரிய கற்களை அடுக்க முடியும் பல நூற்றாண்டுக்கு முன்பு மனிதனால் இந்த காரியத்தினை செய்திருக்க முடியாது. இதனை பூதமே அடுக்கியிருக்க முடியும் என இக்கிராம மக்கள் நம்புகின்றனர். இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்கும் ஒரு காரணம் உண்டு முத்துஐயன்கட்டு குளத்தினையும் பூதம் தான் வெட்டியது என்ற ஒரு பழைமையான கதையும் உண்டு. 
பூதம் அடுக்கிய கல்
இருநூறு மீற்றருக்கு அதிகமான பகுதிக்கு அடுக்கப்பட்டிருந்த இந்த கற்கள் இன்று வேறு தேவைகளுக்காக சில விஷமிகளால் உடைத்து திருடப்பட்டு வருகின்றது. இதனால் வெள்ள நேரத்;தில் ஆற்றுநீர் குடிமனைகளுக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்;படுத்துகின்றது. 

இதனை தமது கிராமத்தின் அதிசயமாக பார்க்கும் இந்த பூதம் அடுக்கிய கல் பற்றி முத்துஐயன்கட்டு கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவரிடம் கேட்டபோது 'நான் அறிந்த காலத்தில் இருந்து இக்கல் இருக்கின்றது. எமது முன்னோர்கள் ஆற்று நீர் காணிகளுக்கு வராதபடி செய்திருக்கின்றார்கள். இதனை தற்போது எமது கிராமத்துக்கு  வரும் அனைவரும் பர்ர்வையிட தவறுவதில்லை. அதுமட்டுமன்றி அயல் கிராம பாடசாலை மாணவர்களும் வந்து பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் செல்கின்றனர்.  இதனை பேணிப்பாதுகாக்கும் போது இதன் தொன்மையினை நாட்டில்உள்ள அனைத்து மக்களும் பார்க்க முடியும்' என்றார். 

இவ்வாறு ஒரு கிராமத்தின் சின்னம் மட்டுமல்ல. தமிழர்;களின் பாரம்பரிய வரலாற்றை பறைசாற்றும் சின்னமாகவே இவ் பூதம்  அடுக்கிய கல் திகழ்கின்றது. இது ஒரு தொல்பொருள் சின்னமாக பாதுகாக்க வேண்டிய நிலையில் உரியவர்கள் கவனிப்பார்அற்ற நிலையில் இதன் சிறப்பை இழந்து நிற்கின்றது. இதனை குறுகிய நோக்கத்துடன் சில விஷமிகள் அழித்து வருகின்றனர். 

எழுத்து :- கா.கணேசதாசன்.

Wednesday, February 22, 2012

எகிறும் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்கள்.


இந்த பூமியில் கிடைக்கும் அரிய வளங்களை கொண்டே மனிதன் இன்று தனது அன்றாட வாழ்க்கை முறையினை வெகு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றான். மிக அத்தியவசியமான சில பொருட்கள் எல்லா இடமும் கிடைப்பதில்லை குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமாக கிடைக்கும். அந்தவகையில் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் அதிகமாக காணப்படும் மசகு எண்ணை உலக இயக்கத்துக்கு மிக முக்கிய பங்கை பெறுகிறது.

அண்மை காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் அமைதியின்னை பல்வேறு நாடுகளில் பொரும் தாக்கத்தை செலுத்துகின்றது. இதன் காரணத்தால் குறிப்பிட் சில தினங்களுக்கு முன் இலங்கையிலும் மசகு எண்ணைய் மூலம் பெறப்படும் அனைத்து எரிபொருட்களுக்கு சடுதியான விலை உயர்வினை உயர்த்தி இருந்தது. இதனால் இலங்கையில் அனைத்து மக்களும் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கினார். இவ்விலை உயர்வினை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், பல விமர்சனங்களும் இடம் பெற்றாலும் அரசாங்கம் அவற்றுக்கு செவி சாய்ப்பதாக இல்லை.

நாட்டின் எல்லாபகுதி மக்களும் இவ் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டாலும் பெரிதும் பாதிக்கப்படுவது. மலையக பெருந்தோட்ட மக்களே மலையகத்தில் மின்சார வசதியற்ற மக்களுக்கு 200 ரூபா மானியம் வழங்கி இருந்தாலும் இது தொடர்பாக டீடீஊ தமிழோசைக்கு கருத்து தெரிவித்த தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே. வேலாயுதம் மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு மட்டும் மாதத்திற்கு வழங்கப்படுகின்ற 200 ரூபாய் மானியம் இரண்டு லீற்றர் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு கூட போதுமானதல்ல, மலையகத்தில் மின்சார வசதியற்ற மண்ணெண்ணெய் விளக்கை நம்பியிருக்கின்ற குடும்பங்களுக்கும் சமையல் தேவைகளுக்காக மண்ணெண்ணெய் அடுப்பை நம்பியிருக்கி;ன்ற குடும்பங்களுக்கும் 200 ரூபா மானியம் உதவாது என்று கூறினார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச சந்தையில் எண்ணைய் விலை கூட்டப்படவிலலை கூட்டப்பட்டு விடுமோ என்ற அச்சம் தோண்றுகின்றதே தவிர கூட்டப்பட விலலை. அப்படி கூட்டினாலும் ஒரு லீற்றருக்கு மண்ணெண்ணெய்க்கு 25 – 35 வரி அறிவிடப்படுகின்றது அதனையும் பார்க்கவேண்டும். அரசாங்கம் விண்விரயம் செய்து கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார். எவை எப்படியோ குறைந்த ஊதியத்தினை பெறும் தோட்டத்தொழில் மக்கள் இனிவரும் காலங்களில் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர் நோக்க வேண்டி இருக:கும்.

நீண்ட தொரு உள்நாட்டு யுத்தத்துக்கு முகம் கொடுத்து தற்போது படிப்படியாக தமது இயல்ப வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் வன்னி பொருநில பகுதி மக்களும் இவ்விலை உயர்வால் நொந்து நூலாகியுள்ளனர். வன்னியின் பெரும் பகுதிகளில் மேட்டு நீர்ப்பாசனத்தையே நம்பி விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர் இவர்கள் தமது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடனேயே நீர்ப்பாசனத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு விலை கொடுத்து எரிபொருள் வேண்டி இறைத்து இலாபத்தினை பெறமுடியுமா என பலர் கேள்வி எழுப்பினர் 'பட்ட காலிலேயே படும்' என்பது போல எமக்கு விமோசனமே கிடைக்காத என பலர் ஆதங்கப்பட்டனர்.

இலங்கை வாழ் மீனவ மக்கள் இவ் விலை உயர்வால் பெரும் நெருக்கடியினை முகம் கொடுத்துள்ளார்கள். இவ்விலை உயர்வு தாம் செய்யும் தொழிலில் இலாபத்தினை பெற முடியாது. உடனடியாக விலையினை குறைக்கவும் அல்லது தமக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு பல ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்ட போது உயிர்கள் பறிக்கப்பட்டதே தவிர முன்னேற்றகரமாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

விலை உயர்த்தப்பட்ட போதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், வீதிகளிலும் வாகணங்களுக்கு குறைவே இல்லை வழமைபோல் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றது. படிப்படியாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐம்பது சதம் என விலையினை உயர்த்தி வந்த அரசு அண்மையில் உயர்திய இந்த அதிக அளவிலான விலை உயர்வு இத்துடன் முடிவடைய போவதில்லை இனிவரும் காலங்களில் யுத்த காலத்தில் வன்னிமக்கள் எரிபொருளுக்கு எவ்வகை கஸ்ரத்தினை எதிர் கொண்டார்களோ அதனைவிட இனிவரும் காலங்களில் இந் நாட்டு மக்கள் அனைவரும் எதிர் நோக்க வேண்டி வரும் என்பது திண்ணம்.

Friday, January 27, 2012

குழாயில் ஏற்பட்ட தீடிர் கசிவு


           கோண்டாவிலிருந்து யாழ்ப்பாணம் பிரதான நீர்தாங்கிக்கு நீரை வழங்கும் தரைக்கீழ் நீர்வழங்கும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் நீரை பெறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
வெடிப்பு ஏற்பட்ட பகுதி
             தபால்ப்பெட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள நீர் வழங்கும் 12' விட்டமுடைய குழாயில் ஏற்பட்ட இவ் வெடிப்பின் காரணமாக நீர் வெளியேறத்தொடங்கியதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அதிகாரி  தெரிவித்;தார். 
திருத்த வேலை செய்யும் பணியாளர்கள்
              அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நேற்று மாலையில் இருந்து ஊழியர்கள் வெடிப்பு ஏற்பட்ட குழாயினை சரிசெய்து வருகின்றனர். திருத்த வேலைகள் இன்று மாலைக்குள் நிறைவடையும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித்தேவைகளை நிறைவு செய்வதற்காக நீர்தாங்கிகள் மூலம் நீர்வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 

Tuesday, January 24, 2012

நிழல் படம் சொல்லும் கதை...........


யாழ்ப்பாண பருத்தித்துறை முனை கடற்கரையில் வலைகளில் இருந்து மீன்களை பிரித்தெடுக்கும் இப்பகுதியை சேர்ந்து மீனவர்கள்.
பிடிபட்ட மீன்களை வலையில் இருந்து பிரித்தெடுக்கின்றனர்.

         இலங்கையின் மீன்பிடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைகளில் பருத்தித்துறை கடற்பகுதியும் பிரதான பங்கினை வகிக்கின்றது. அத்துடன் வருவாயை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் மீன்பிடித்துறை முக்கியமானதாகும். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன்பிடியினையே தமது வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றனர்.
கடற்கரையில் மீனவர்கள்

              போர் காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட இத் தொழிலானது இப்போது நிலவும் சாதகமான சூழ்நிலையால் மீனவர்கள் தமது வருமானத்தை அதிகளவிலாக பெற்று வருகின்றனர். இப்போது இவர்கள் ஆழ்கடலுக்கு சென்றும் மீன்பிடிக்க முடிகிறது. அதிக குதிரைவலுவுடைய இயந்திரங்களை பொருத்தி மீன்பிடிக்க அனுமதி கிடைத்துள்ளது.

கரையினை அடைந்த மீனவர்கள்.

               இவர்கள் பிடிக்கும் மீன்களை வெளிமாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியதாக உள்ளதால் மீன்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகமாக உள்ளது. இத்துறைக்கு அரசாங்கமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் மானியங்களை வழங்கி ஊக்குவித்து வருகின்றது. 

வேலுரில் ஓர் மாலைப்பொழுது.


வேலூர்க் கோட்டை

        தென்னிந்தியாவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களும் கிராமங்களும் இருக்கின்றன. ஆவ்வரலாற்று சிறப்புக்களை நாம் பாடப்புத்தகங்களிலும், திரைப்டங்களில் பார்த்திந்தோம். அத்தகய வரலாற்று சிறப்பு மிக்க ஓர் நகரம் தான் வேலூராகும். இவ் வேலூர் நகரத்துக்கும். சென்று நான் அதிசயித்து நின்ற இடங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

 வேலூர்க் கோட்டை

          கடந்த மாதம் யாழ்ப்பாணப்பல்கலைகழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் ஊடக கற்கை நெறியினை பயின்று வரும் மாணவர்கள் தெனினிந்திய கல்விச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு ஊடகவியலாளர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பல வலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களை பார்த்தோம் அதில் எனக்கு வியப்பபை ஏற்படுத்திய இடம் தான் வேலூர்.

          சுற்றுலாபயணிகளை பெரிதும் கவர்ந்திருக்கும் வகையில் வேலூரின் நடுவே அமைந்துள்ள கோட்டை கி.பி16 நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் விஜயநகரப்பபோரரசின் சதாசிவ தேவ மகாராஜரின கீழ் பணிபுரிந்த சின்ன பொம்மி நாயக்கரால் நிறுவப்பட்டது. விஜயநகரப் பேரரசு இஸ்லாமிய பேரரசர், மராட்டிய பேரரசு, ஆங்கிலேயேப் பேரரசுடன் பல்வேறு காலகட்டங்களில் தொடர்புடைய வரலாற்றுப்புகழ் பெற்ற கோட்டையாக இருந்து வந்துள்ளது. 
ஜலகண்டஈஸ்வரர் ஆலய சிற்பம்

      ஆங்கிலேயர் இக் கோட்டையினை கைப்போற்றிய போது,  ஸ்ரீரங்கப்பட்டன வீழ்ச்சிக்குப் பிறகு திப்பு சுல்தானின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு இக் கோட்டையில் உள்ள திப்பு மகாலில் அடைக்கப்பட்டனர். இந்திய சுகந்திரத்திற்கு வித்திட்ட 1806ம் ஆண்டு நடைபெற்ற முதல் சிற்பாய்க்கலகம் இங்கு ஏற்ப்டடது. ஆங்கிலேயரை எதிர்த்து கண்டியை ஆண்ட மன்னன் விக்ரமராஜசிங்கே இக் கோட்டையின் உள்ள கண்டி மகாலில் சிறை வைக்கப்பட்டான். ஆகியவை வேலூர் கோட்டையின் சிறப்புகளாகும்.

            இவ்வாறு பல சிறப்புக்கைளை கொண்ட இல்வேலூர் கோட்டையினை நேரில் சென்று பார்த்த போது வியப்பாகவே இருந்தது. இதன் அமைப்பானது சுற்றி அகழி காண்ப்படுகின்றது, கோடடை சுவரானது பெரும் விசாலமானதாகவும் அதன் மேல் பல கண்காணிப்பு இடங்களும காணப்படுகின்றது. முற்றுலும் இக்கோட்டையானது கருங்கல்லினை கொண்டே கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கோட்டைக்குள் சைவ ஆலயம், கிருஸ்த்தவ ஆலயம், மசூதி போன்று மூன்று கோயில்களும்அமைக்கப்ட்டிருக்கின்றது. 

     ஆனால் சைவ கோயிலான ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் கலையம்சத்துடன் கூடிய சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த ஓர் ஆலயமாகும்.
இத்தலத்து சிவன் புத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வெங்கடேசப்பெருமான் காட்சி தருகிறார். இக்கோயிலில் கலையம்ச திருமண மண்டபம் வருவர்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

      பொம்மி சிவனுக்கு கோயில் எழுப்பிய போது சுற்றிலும் ஒரு பிரமாண்டமான கோட்டையைச் கட்டினார். கோட்டையைச் சுற்றி தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யான மண்டபம் இருக்கிறது. இந்த இந்த மண்டபத்தில் வித்தியசமான பல சிற்பங்கள்வழிக்கடிப்ட்டிருக்கிறது. 

          வெண்ணெய் பானையுடன் கிருஸ்ணர், பைரவர். நடராஜர், சரபேஸ்வரர், சிவமுர்ததஙகள், கண்ணப்பர் வரலாறு, நரசிம்மனின் பாதம் அரிகல் வணங்கியபடி கருடழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், மகரிஷி யோகாசனம் செய்யும் சிற்பம், மேல்வதானத்தை தாங்கும் கிளிகள் என கண்னைக்கவரும் பல விதமான சிற்பங்கள் இருக்கின்றது. 

        இந்த மண்டபத்தின் அழகில் வசித்த வெள்ளையர் தளபதி ஒருவர் துண்களோடு பெயர்த்திச் செல்ல விருமபினார். இதற்காக வெளிநாட்டிலிருந்து கப்பலை வரவழைத்தார் அனால் அக்கப்பல் வழியிலேயே விபத்தைச் சந்தித்ததால் இத்திட்டம் கைவிட்டார். இவ்வாறு இக்கோயிலின் சிறபஙகளை பார்க்கும் போது அதனை எம்நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என எண்ணம் தோண்றும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு வேலூர் தமிழர்களின் காதல், வீரம், பக்தி, கலாச்சாரத்துடன் பின்னிப்பினைற்து ஓர் வியயப்புக்குரிய இடமாகவே இன்றும் திகழ்கின்றது.

படங்கள்- இணையம்.

Tuesday, July 12, 2011

அழிவை எதிர்நோக்கியுள்ள பழம்பெரும் பத்மாலயம்.



கட்டடங்கள் மனித உழைப்பின் சாரமாய் திகழ்பவை. நூற்றுக்கணக்கான ஆயுளை அவை கொண்டுள்ளன. இருந்தபோதிலும் யுத்தங்களும், இயற்கை பேரிடர்களும், அபிவிருத்திப்பணிகளும் அவற்றை அழித்துள்ளன. இருப்பினும்  அவற்றையும் தாண்டி சில உரம்பெற்ற கட்டப்பகுதிகள் சில நிமிர்ந்து நிற்பதையே இப் ஒளிப்படம் பிரதிபலிக்கிறது.
யாழ்ப்பாண நகரப்பகுதியின் பருத்தித்துறை வீதியில், வேம்படிச்சந்திக்கு அருகாமையில் தமிழர்களின் கட்டக்கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக 1908இல் கட்டப்பட்டதே "பத்மாலயம்" ஆகும். இதன் பெரும்பகுதிகள் யுத்தத்தினால் அழிவடைந்த போதிலும் இதன் முன்பகுதி மட்டும் இன்றும் மிஞ்சிநிற்கிறது. யாழ்ப்பாணக்குடாநாட்டில் செயற்படுத்தப்பட்டுவரும் வீதி அகலிப்பால் இதுவும் இல்லாது போய்விடும்.

Wednesday, April 20, 2011

அங்காடித்தெரு திரைப்படம்

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் சில படங்களே மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை யதார்த்தபூர்வமாக சொல்லி மாபெரும் வெற்றியடைகின்றது. அந்தவகையில் சென்ற ஆண்டு வெளிவந்து அனைத்து தமிழ்திரைப்பட ரசிக உள்ளங்களை கொள்ளைகொண்ட ஓர் அற்புதமான திரைப்படம் தான் இந்த அங்காடித்தெரு.


தமிழகத்தின் பின்தங்கிய வறியகுடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன், அவனது தந்தையார் விபத்தில் இறந்து விடுகின்றார். குடும்பவறுமையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போக தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சென்னையில் உள்ள பிரபல புடைவைக்கடை ஒன்றுக்கு வேலைக்கு செல்கிறான். இவ்வாறு நகரப்புறங்களுக்கு வேலைதேடிச்செல்லும் இளைஞர்கள் நகரசுரண்டல் முதலாளி வர்க்கதினர்களால் எவ்வாறு இருபத்திநான்கு மணிநேரமும் வேலைவாங்குகிறார்கள் என்பதையினையும். அவர்களின் உணர்வுகளுக்கு போடப்படும் பெரும் தடைகள். இவ்வாறு அடிமைகள் போல் நடத்தப்படும் அவர்களின் வாழ்க்கையினை மிகவும் ஒரு தத்துருவமான முறையில் பிரபல இயக்குனர் வசந்தபாலன் சொல்லியுள்ளார்.

திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை கட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிக மக்களின் நடமாட்டம், குப்பபையும் கூழமுமான சேரிப்புறப்பமான காட்சியின் பின்புறங்கள் கதைக்கு உயிருட்டாமாக காணப்படுகிறது. ஒவ்வொரு கட்சியமைப்பிலும் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணன் வேலை செய்யும் கடை பையைக்கண்ட தங்கை ஒடிச்சென்று அந்த பையை வைத்திருப்பவர்களிடம் அதைக்கேட்பது, நான் உன்னைக்காதலிக்கவில்லை என்று கூறியதுடன் அவள் விழுந்து தற்கொலைசெய்து கொள்வது என பல காட்சிகளில் நெஞ்சு நெகிழ்கிறது.
வீதியோர மக்களின் வியாபார முறைகளையும் சுவைபட சொல்லியுள்ளார். கண்தெரியாதவரும் ஒரு தொழில் செய்வது. மலசலகூடத்தில் பணிபுரிகின்றவர்கள். பேன்றோரின் வாழ்க்கை முறையினை தெளிவாக குறியிருப்பதன் ஊடாக அனைவராலும் வாழலாம் என்ற எண்ணக்கருவை இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

தமது கடையில் வேலைபார்கிறவர்கள் காதல், கல்யாணம் போன்றவற்றில் ஈடுபட்டால் அக்கறை இருக்காது என்பதால் அங்கு காதல் மறுக்கப்படுகிறது. அப்படி இருக்கின்ற போது நாயகனும் நாயகியும் காதலிக்கினறர்கள். அவர்களின் காதலுக்கு முதலாளியிடம் இருந்தே எதிர்ப்பு வருகிறது. அதை மீறி காதலர்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் உங்கள் முன்னிலையில் வாழ்ந்து காட்டுவோம் என்ற சபதத்துடன் செல்கின்றார்கள். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்ற சொல்லுக்கு அமைய விபத்து ஒன்றில் நாயகி தனது கால்கள் இரண்டையும் இழக்கின்றாள். அதன்பின்பும் நாயகன்அவளைத் திருமணம் செய்கிறான். அவர்கள் இருவரும் வீதியோர வியாபரத்தில் ஈடுபடுகின்றர்கள். இவ்வாறு திரைப்படத்தை இயக்குனர் சுவைபட இலக்கிய நயத்துடன் எடுத்துள்ளார்.


படத்தில் இடையிடையே தனியார் கடையொன்றில் பணிபுரியும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை தத்துருவமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக சீட்டுக்குழுக்கியது தப்பென்று நாயகி அஞ்சலியை மூடிய அறைக்குள் கூட்டிச்சென்று வில்லன் செய்யும் துன்பங்களை உண்மையாக சொல்லி இருக்கின்றனர்.
அறிமுக நாயகனாக வரும் மகேஷ; மற்றும் கற்றது தமிழ் அஞ்சலி மற்றும் துணைநடிகர்களின் நடிப்பில் யதார்த்தம் தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ;, விஜய்அன்ரனியின் இசையில் வந்துள்ள பாடல்கள் அனைததும் படத்தில் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. குறிப்பாக 'அப்படி யொன்றும் அழகில்லை...'  ஜெயமோகனின் வசனம் உயிர்த்துடிப்புடையதாக காணப்படுகிறது.

இயக்குனர் - வசந்தபாலன்
இசை - ஜி.வி.பிரகாஷ;, விஜய்அன்ரனி
பாடல் வரி - நா.முத்துக்குமார்
வசனம் - ஜெயமோகன்
நாயகன் - மகேஷ;
நாயகி - அஞ்சலி
வில்லன் - இயக்குனர் வெங்கடேஷ;
முதலாளி - பழ. கருப்பையா
நண்பன் - பிளாக் பாண்டி